பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயற்றமிழுக்கு இசைகூட்டினால் ஆளத்தி
எழுத்தும் சீரும் அடியும் தொடர
பொருளும் தாளத்தோடு பொருந்துவதே பண்
இடக்கை உடுக்கை பேரிகை பறைஎன
மத்தளவரிசைகள் தோற்கருவி
வண்டு துளைத்த மூங்கிலில் புகுந்து
தென்றலும் ஊதிற்று குழலோசை
சுரத்துக்குச் சுரம்பாடும் துளைக்கருவிகள்
இசைக்கலையும் நுணுக்கமாக வளர்ந்தது
வண்டுகள்பாட மொட்டு மலர்ந்தது
யாழும் இசைத்து கல்லும் கரைந்தது
தொட்டிலில் தொடங்கிற்று ஆராரோ ஆரிரரோ
ஊஞ்சல் பாட்டுக்களை ஊசல்வரி என்றார்
ஆற்றுவரி கானல் வரி அம்மானை பாடினார்
ஏற்றப்பாட்டு ஏர்ப்பாட்டு எதிர்ப்பாட்டும் உண்டு
மங்கல வாழ்த்துடன் வாழ்க்கை துவங்கும்
செறுப்பரை பரிபாட்டுடன் நெய்தலும் கறங்கும்
இரையோடு இசைந்ததே அவன்கதை
பாணன் பறையன் துடியன் கடம்பன்
இந்நான் கல்லது குடியும் இல்லை என்றார்
அவரவர் இசைத்தக் கருவியே பெயர்தந்தது
ஆதி மனுக்குலம் இசைவழி நான்கானது
மறந்தானோ இழந்தானோ மாய்ந்ததோ பழங்கலை.
மீந்த சுவட்டில் பிறந்ததே வீணை
பழய வில்லின் புதுப்பிறப்பே சாரங்கி

21