பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நட்ட பாடையே நாட்டைக் குறிஞ்சி
பழம் பஞ்சுரமே சங்கராபரணம்
காந்தார பஞ்சமம் கேதார கௌளை
பஞ்சமத்தை ஆகரி எனப் பகர்ந்தார்
இரவுக்கு பொழுதை எட்டாக வகுத்தார்
பொழுதுக்கு ஒரு ராகமாக புகன்றார்
தக்க ராகமே கன்னட சாம்போதி
பழந்தக்க ராகம் சுத்தசாவேரி
சீகாமரம் நாத நாமக் கிரியை
கொல்லிப் பண் சிந்து கன்னடா
வியாழக் குறிஞ்சி சௌராஷ்டிரம்
மேகராகக் குறிஞ்சி நீலாம்பரி
குறிஞ்சிப் பண்ணை மலகரி என்றார்
அந்தாளிக் குறிஞ்சி சைலதே சாட்சி
முந்தைய பண்வகை பிந்திய ராகமாக
பாடுகின்றார் ஆயினும் பழந்தமிழன் கணக்குப்படி
பண்கள் நூற்று மூன்றும் இன்றய
மேளக்காத்தாக்கள் எழுபத்து இரண்டுக்குள்
இடம் கொள்ள வில்லை இனம் தெரியவில்லை
பெயரும் மரபும் பிறழ உரைப்பார்
மறந்தது போக பெயர் திரிந்தது போக
மிகுந்த பண்களை நிகண்டுகள் சொல்லும்
பாவுக்குப்பா, பாடுகின்ற ராகமும் வேறுபடும்
அகவலுக்கு ஆரபி, கலித்துறைக்கு பைரவி
வெண்பாவை சங்கராபரணத்தில் சொல்லுவார்

23