பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டுவ வரி என்றும் விளம்பினார்
முல்லையில் ஆய்ச்சியர் குறவை ஆடினார்
மருதத்தில் பள்ளும் வள்ளையும் பரவசப்பட்டது
நெய்தலில் கானல்வரி கேட்டது
ஆக ஆடற்கலை நாட்டிய மெனப்பட்டது
நாடக நாட்டியப் பொதுபெயர் கூத்து
நடப்பது போன்று நடிப்பது நாடகம்
பொருளும் உணர்வும் புரியாத அயலார்
நாடகச் சொல் தமிழில்லை என்றார் அறியாமை!
புனைந்து வேடமிடுவார் பொருநர்
கூத்தர் பொருநர் விறலியரென்று
கலைவளர்த்த செல்வரே காலவெள்ளத்தில்
ஆடற்கலை திரிந்து பரதமாக
பரதரும் பரத்தியரும் ஆனார். பின்னால்
பழிப்புக்குரிய பரத்தையர் ஆயினர்
வெண்டுறைக்கு விளைந்த கொடுமை இதுவே
யாழ்தான் வாழ்விழந்தது என்பதில்லை
யாழோர் மரபும் தாழ்ந்தது தாழ்ந்தது

25