பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கிலிசரப்பளி சவடி ஆரமென்று
எழுத்துக்கு யாத்தனர் காதில் குழையாடிற்று
உச்சிப்பு, தென்பலி வலம்புரி எனவே
தலைக்கு ஒரு கோலம் செய்தார் மகளிர்
நறுநெய்யும் மண மலரும் மங்கலம் செய்யும்
இளமைசதிராட வளமை கொஞ்சும்
களவும் கற்புமே அவர் வாழ்வியல்

கற்புக்கு புறம்பான களவை அவர் அறியார்
கந்தர்வமென பட்டபுற நடையாளர்க்கு
கற்பு பொறுப்பன்று கன்னியும் தாயாவாள்
தமிழ்ப்பாடி கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்நெறி
ஒருதலைப் பட்ட விரதமல்ல
அவனொரு துள்ளும் இளங்காளை வயது பதினாறு
கறுகறுவென்று புதுமீசை அரும்புகட்டும் பருவம்
அவளும் அன்றலர்ந்த புதுமொட்டு
ஆண்டு பனிரெண்டில் அடிவைத்திருப்பாள்
செம்புலப் பெயல் நீர்போல
அன்பு கலந்த நெஞ்சத்து ஆருயிரும்கலந்து
ஊரும் நாடும் உவப்ப மணப்பார்
ஒத்துக் கொள்ளாது ஊரலர் தூற்றம்போது
வேற்று நிலத்தின் விருந்தனர் ஆவார்
உடன் போக்கென்று உரைத்தனர் மேலோர்
இதுவே காதல் களவெனப் படுவது
நாற்பத்தெட்டாண்டு வாலிபம் காத்த

27