பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லும் செயலும் ஒரு வழிப்பட
பயன் மிகுந்த நல்வழியில் பழகினான்
பழக்கமே வழக்கமாக ஒழுக்கமாயிற்று
ஒழுக்கத்தை உயர்வை விழுப்பம் என்றான்
விருப்பத்தின் விழுப்பமே ஞானம் ஆயிற்று
விருந்து புறந்தந்து வீட்டுக்கும் நாட்டுக்கும்
ஏற்பன செய்தான் இல்லறமென்றார்
பிறர்க்கென்று வாழ்ந்த சாண்றான்மையை
தன்னல மறுப்பினை துறவறமென்றார்
இயற்கையிலும் பெரியதெய்வம் அவருக்கில்லை
கதிரவனை கொடிநிலை என்று தொழுதார்
உயிரும் பயிரும் தழைக்க ஒளிசெய்து
பாரை நடத்தும் கண்கண்ட பருப்பொருள்
கதிரவன் என்பதால் முதன்மை தந்தார்
காய்கின்ற நிலவை வள்ளிஎன்று வணங்கினார்
புறத்தில் குளிர்ந்து அகத்தில் வெம்மையுடன்
கிளர்ச்சியும் வளர்ச்சியும் தருகின்ற பேராற்றல்
இரவில் உலகைக் கொண்டு நடத்தும் குளிரொளி
வள்ளி என்பதால் வாழ்த்தினார் வழிபட்டார்
எரிதழலை கந்தழி என்று போற்றினார்
சூடும் சுடரும் சூழ் ஒளியும் உடையது
ஆக்கவும் அழிக்கவும் வல்ல பேராற்றல்
கதிருக்கும் நிலவுக்கும் கண்கண்ட எதிரொளி
மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று

29