பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆதலின் கதிரோடு நிலவோடு வைத்தெண்ணினார்
நம் முன்னோர் கண்ட முத்தீ இதுவே
முன்னைப் புகார் நகரத்து புறநகர்ப் பகுதியில்
சூரிய சோம அக்கினி என்ற
மூன்று குண்டங்கள் மூட்டியிருந்தார்
என்பதற்குப் புறச்சான்றாக இன்றும்
திருவெண் காட்டில் மூன்று குளங்கள் உண்டு
ஆரிய மரபு அறைகின்ற முத்தீ
ஆகவநீயம் காருக பத்தியம்
தட்சிணாக்கினியம் என்ற மூன்று
வேள்வித் தீயில் நெய்யும் பொரியும்
காய்ந்த சுள்ளிகொண்டு காய்வதாகும்
உயிர்க்கொலை செய்த ஊனைவானவர்க்கு
அர்க்கியம் என்று அனுப்பி வைக்க
அங்கியந்தேவனை மும்முனைப் படுத்தி
அளித்த பெயரே ஆரிய முத்தீ
தமிழன் கண்ட தழல்வேறு வழிவேறு.

30