பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செந்தமிழ்ச் சுவடு


முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்ட தமிழர் நாகரீகம் பெரிதென்பேன்
பொய்யும் வழுவும் புரையோடாத வாழ்வு
இல்லை என்னாதவர் என்பும் பிறர்க்கு உரியர்
அறமும் மறமும் அகமும் புறமுமாக
வாழ்ந்த லெமூரிய வழிவழி வந்தவன்
மாவலி என்றொரு மன்னவன் இருந்தான்
அவன் பெயரால் மாவலிக் கரை என்று
சொல்லுகின்ற ஊர் கேரளத்திலுண்டு
மாவலி கங்கை இலங்கையில் ஓடுகின்றது
மாவலிபுரமென்ற கடல்துறை பட்டினம்
மாமல்லபுரம் என்று பெயர் மாறிற்று ஆயினும்
அங்க மாவலி சிற்பமாக நிற்கின்றான்
பாண்டியத்து படைத்தலைவரில் ஒரு பரம்பரை
மாவலி வாணராயர் என்று பட்டம் கொண்டிருந்தது.
கேரளத்தில் ஓணத் திருவிழா இன்றும்
மாவலிக்கே நடக்கின்றது மறக்கவில்லை
வாமனனுக்கு வாக்களித்த மன்னவன் அவனே
மண்ணே இழந்தான் மாதவன் ஆனான்
அந்த மாவலிக்கு மக்கள் ஐவர்
அவர்களில் வலியவர் மூவர் அரசரானார்
சேர சோழன் செழியன் என்று
சொல்லுகின்ற குலங்கள் மூன்றானது

31