பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடபெண்ணைக்குச் சென்ற மகன் வடுகன் ஆனான்
கபினி கடந்து காவிரிக்கு அப்பால்
கருநிலத்துச் சென்றவனை கரு நடன் என்றார்
சொத்துரிமை தந்தைவழிப் பட்டது ஆயினும்
வழக்காற்றில் பங்காளியை தாயாதி என்றே வழங்கினார்
பிரளயத்துக்குத் தப்பிய மேலைக் கரையாளர்
யோர்தான் நதிக்கரையில் யூதரானார்
அமெரிக்க அமேசான் ஆற்றுப் படுகையிலே
மெக்ஸிகோ நாட்டு மலை முகட்டினிலே
கலிபோர்னிய மண்ணில் தென்புலத்துச் சாயலை
பெரூவியம் மாயா என்றே வளர்த்தார்
அழிந்த சுவடும் அழியாத நிழலும்
இன்றும் லெமூரியத்தை நினைவுறுத்துகின்றது
தெறல் பஃறி சுவரோவிய எழுத்துக்கள்
சொல்லுகின்றபடிக்கு தென்னவன் நாட்டு
பாண்டியக்கரையிருந்து சென்ற பழயவரே
நீலாற்றுப் படுகையில் எகிப்திய ரானார்
மக்கள் உரைவிடத்தை ஊர் என்றே உரைத்தார்
நம் முது மக்கள் தாழி முறைப்படியே
பிரமிட் கோபுர புதைகுழி வழக்காயிற்று
மனுவென்னும் பெயரையே மேன்சு என்று
எகிப்தின் முதல் மன்னவன் தரித்தான்
சிதறிப் போன செந்தமிழ்ச் சோழரே
சாலடிய ரென்று சாத்திரம் சொல்லும்
சேர இனத்திலிருந்து சென்றவரே கிரீத்துகளானார்

32