பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுமேரியர் அக்கேடியர் என்று சொன்ன
பாபிலோனியப் பரம்பரை பகலவ வழிபாடுடையது
அண்ணாமலை முகட்டில் அகண்டம் ஏற்றும்
செந்தமிழ் ஒளிவிளக்கு சென்றவர்க்கும் உண்டு
ட்யூடானியர் வழிபட்ட ஓடன்கடவுள்
பெண்ணை தன்பால் வைத்த சிவனே
பழய ரோமரின் ஜுபிடர் வழிபாடும்
தென்னகத்து சிவபூசை என்றே சொல்வார்
அவர்கள் ஊரும் பேரும் உரிச்சொல்லும்
தமிழின் வேரடிப் பிறந்ததென்றே விளங்கும்
வாழ்வியல் வழிபாட்டு முறைகளில்
தமிழ் தழுவிய சாயலே தெரிகின்றது
சியாஸ் என்றதொரு கடவுளுக்கு
சடைமுடியும் முத்தலை வேலுமுண்டு
படைப்புக்கு வேலென்றார் முருகையும் வழிப்பட்டார்
ஏசுபிரான் காலத்தில் எல்லாம் வல்லவனை
ஏலோகி என்றார் எல்சடை என்றார்.
சூரியனென்ற பொருளே சொல்லும் தமிழே
இஸ்ரவேல் மரபினர் ஆன்கன்றை தொழுதது
தென்புலத்து நந்திக்குச்சான்று
சூரிய சந்திர வழிபாட்டை
கோயிலுடன் மெக்ஸிகோ கொண்டிருந்தது
ஆளுயர லிங்கம் ஒன்று இன்றும்
விடியா கல்லறையின் மேல் நிற்கின்றது

33