பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாயரசனை மறந்து தனியரசு ஆனார்
வடபுலமே தமிழ்ப் புலமாய்த் தழைத்தது
மண்மாரிப் பொழிந்ததோ மாநதி தடம் புரண்டதோ
நில நடுக்கத்தில் நெடு நகரங்கள் அழிந்தனவோ
கொள்ளையிட வந்த வெள்ளையினம் கொளுத்தியதோ
அழிந்தன சிந்து வெளி கோட்டைகள்
அழியாத பண்பாட்டின் காலடிச் சுவட்டில்
எழுதாத சரித்திரத்தை இடிபாடுகளாக
வருங்கால சந்ததியின் சிந்தனைக்கு விட்டு
இறந்தார் மேடென்று இலக்கியம் சொல்லும்
மூகிஞ்சதரையே மொஹஞ்தரோ
தகர்ந்த தரையே தகஞ்சதரோ
சரிந்த தரையே சான்ஹதரோ
நொடிஞ்ச தரையே லொஹஞ்சதரோ
அழிந்தமேடே அலிமுரடு
பாண்டி வாஹி அமரி கோட்லா
அனைத்தும் அழிந்து மண் மேடாயின
புதை பொருள் போடுகின்ற புதிரை அவிழ்த்தால்
அரிக்கா மேடும் ஆதிச்ச நல்லூரும்
புதுக்கோட்டை புதைகுழியும் ஆங்கே தெரியும்
சரித்திர காரர்கள் சாற்றுகின்றவாறு
ஹங்கேரியில் தொடங்கி ஆசியாவில் திரிந்து
சிந்துக்கும் கங்கைக்கும் ஆரியம் வருமுன்னே
வேதத்தின் ஒலி இங்கே கேட்கு முன்னே

36