பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேள்வித்தீ இந்த மண்ணில் சூழுமுன்னே
தழைத்திருந்த சிந்துவெளி சிந்தனைக்கு வந்தது
மேலோர்கள் மண்மேட்டை வெட்டிப்பிரித்தார்
அகழ்ந்த இடங்களில் அடுக்கு மாளிகைகள்
அகல் நெடுவீதிகள் ஆழ்குழல் சாளரங்கள்
செய்குன்று பொய்குளம் சித்திரக் கூட்டங்கள்
முத்திரைச் சின்னங்கள் முதுமக்கள் தாழிகள்
சுட்டகற்கள் சுன்னப் பதுமைகள்
கூடம்குளியலறை கழிப்பிடம் வெளிப்புறம்
இன்னபலவும் தென்புலத்து அமைப்பே
லெமூரியம் லெமூரியம் என்றே அறைகூவும்
எழுத்துக்கள் படிக்க இயலவில்லை ஆயினும்
தமிழனின் கண்ணெழுத்துக்கும் முன்னெழுத்தே
சுமேரியச்சாயல் உடையதென்பார்
சுமேரியமும் செந்தமிழ்த் தென்னவன் சாயலே
அகப்பட்ட அணிமணிகள் தென்மதுரைக் கைவண்ணமே
தெய்வச்சின்னங்கள் சிவலிங்கத்தோற்றமே
ஆடவல்லான் பதுமை ஆரப்பாவில் அகப்பட்டது
கன்னடத்துப் பொன்துகளும் விச்சிமலை
தமிழ் தமிழென்றே குரல் கொடுக்கும்
திமில் பெருத்த எருதும் தென்னாட்டுக்கடாவும்
நாயும் கோழியும் நம்முடைய வளர்ப்புகளே
பாவை விளக்கும் பார்மகள் வழிபாடும்
பாண்டியத்து முன்மரபைப் பறைசாற்றும்
தென்னவர் நாடே வரலாற்றின் முன்னேடு
சிந்து வெளி சுவடே சான்றுக்குச் சான்று
சிந்தென்றால் ஆறென்றே செப்பினார் முன்னோர்.

37