பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆரியாவர்த்தம்


மேற்கில் நிலைகொண்டது போக நிலைகொள்ளாது
கிழக்கில் வழி நடந்த ஆரியம்
காடும் மேடும் கரடும் முரடும்
கடந்து வந்த வழித்தடத்திலெல்லாம்
கலந்த கலந்த கலப்பினமாக
கலவை மொழிக் குலமாக
இந்திய எல்லைக்கு வந்து சேர்ந்தது
கைபர் போலன் கதவு திறந்து கிடந்தது
காந்தாரத்தில் ஊடுருவி காஷ்மீரில் நுழைந்தார்
சிந்துவெளிச் செல்வம் சிந்தை மயக்கிற்று
வடக்கில் இமயம் நிமிர்ந்து நின்றது
தெற்கில் விந்தியம் தடுத்து கிடந்தது
கிழக்கில் ரமண தேயம் வரைச் சென்றார்
கங்கை யமுனை சோனை பிரமை
செய்த வளத்துக்கு கிறுகிறுத்தார்
பனிமலையும் பசுமையும் பரவசப் படுத்தியது
நாடோடி வந்தவர் இந்நாட்டோடு நின்றார்
முன்னைப் பழங்குடிகளோடு மோதினார்
உறவு கொண்டு கலப்பார் ஓரிடத்து
இரவோடிரவாக எரிப்பார் வேரிடத்து
எழுதாக் கிளவியாக எடுத்துவந்த
இருக்கென்னும் தோத்திரப் பாக்களை

38