பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுதிக் கொண்டார் இங்கிருந்த நாகரியில்
அந்த எழுத்துக்கு மேலிட்ட தலைக்கட்டை
அவிழ்த்தால் அங்கே தமிழ் தெரியும்
அதன் தாயெழுத்து நம் கண்ணெழுத்து என்பதும் புரியும்
இந்த நாள் சம்பல் பள்ளதாக்கின் சதுரப்பாடே
ஆரியம் நடந்த அந்த நாள் அடிச்சுவடு
தன் குலப் பகையை தஸ்யுக்களென்றார்
இயக்கர் அரக்கர் நாகர் என்றே
இழித்தும் பழித்தும் எழுதி வெறுத்தார்
தென்னவரைத் தெவ்வரென்று பழித்தார்
இந்திரன் ருத்திரன் மித்திரன் பிரமன்
வேள்விக்குரிய வேத நாயகரானார்
கங்கைக் கரை ஆரிய பூமி ஆயிற்று
ஆரிய வர்த்த மென்று ஆரவாரித்தார்
வாழ்ந்து தளர்ந்த பழங்குடியும்
வந்து கலந்த ஆரியக் குடியும்
ஒன்று கலந்த புதுக் குலத்தை
இந்தோ ஆரியம் என்றது சரித்திரம்
இந்தென்றால் நிலவென்று ஒரு பொருளும்
பசுமை என்று மற்றொரு பொருளும்
குளிரென்றும் சொன்னதைக் கொண்டு
பெயர் கொண்டது இந்தியர் என்பவரும்
பாரசீகர் ஆறென்று சொன்ன சிந்துவே
இந்தயா ஆயிற்று என்பவரும் உண்டு

39