பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்துகரைக்கு இந்துவெளி என்ற பெயரில்லை
இமயமென்னும் நெடுவரைக்கு மறுபக்கத்து
மங்கோலியச் சீனரும் உரிமை கோருவார்
இந்த மண்ணுக்கே உரித்தான மாமலை
ஐநூற்று காவதத்துக்கும் நெடியது
விந்தியம், என்பதே விந்தியா இந்தியா
பரத கண்டமென்று பகர்கின்றவர்க்குச் சொல்வேன்
பரதன் சகுந்தலை பெற்ற மகன்
மிகவும் பின்னவன், நாடு பல்லாண்டு முன்னது.
வந்து புகுந்தவர்க் கெல்லாம் இந்த நாடு
வாழும் தொட்டிலானது போல்
பிறர் இட்டு அழைத்தது பேராயிற்றோ?
ஆரியமாக வந்த ஆதிமொழி
கலந்த கலந்த கலப்புக்கு ஏற்ப
சிதைந்து சிதைந்து பிராகிருதமாயிற்று
கொண்டு வந்த கதைகளை கவிதைகளை
கற்றுக் கொண்ட எழுத்தில் எழுதிக்கொண்டார்
வந்த இடத்தில் புதிதாய் பயின்ற
கலைகளையும் கொள்கைகளையும் நடப்புகளையும்
தங்கள் வண்ணமாக மாற்றிக் கொண்டார்
ஆதியில் வேதம் அவர்கட்கு மூன்றே
வேதம் த்ரயீ என்பதே அவர் நிகண்டு,
சூரியன்வாயு அக்னி மூவரிடத்தும்
பிரமனால் பெறப்பட்டது என்பார்

40