பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதம் என்றால் அறிவுறுத்துவது அதற்கு
மறைந்த நுண் பொருள் என்ற பொருளில்லை
வேதத்தை இசைகூட்டி ஓலமிடுதலே அவர்மரபு
அலைஅலையாக புதிய இனங்கள் வந்து புகுந்தன
ஆரியம் சிதைந்து வேதியம் ஆயிற்று
இதற்குமுன் இப்படித்தான் நடந்ததென்று
சொல்லுகின்ற இதிகாசங்கள் சரித்திரமாயிற்று
நடந்ததும் புனைந்ததுமாக
சொன்னவன் கற்பனைக்கும் கேட்டவன் ரசனைக்கும்
புராணங்கள் உருக்கொண்டு இலக்கியமாயிற்று
புது வெள்ளத்துக்கு மூழ்காது பிழைத்த
முதுகுடிகள் ஆதிவாசிகள் ஆயினர்
வேற்றியல் பண்பாட்டுத் தாக்குதலை மீறி
தாங்களும் அதுவாக தலைநிமிந்த
பழய தமிழியப் பரம்பரைகளுமுண்டு
அவர்கள் கொண்டு வந்த ஆதி கோத்திரங்கள்
ஆங்கிரச வசிட்ட காசிப பிருகு என்ப
மற்றபடி இங்கே உருக்கொண்ட கோத்திரங்கள்
அத்திரி கௌசிக அகத்தியம் முதலிய
கோத்திரம் என்றால் கோக்களுக்குரிய கொட்டில்
மந்தைக்கு மந்தை பெயர்வேறு தெரிய
தலைவனின் பேரால் தனித்து வழங்கினார்
அதுவே அம்மந்தைக்குரிய மக்களுக்கும் ஆயிற்று.
வந்த ஆரியம் கலந்த ஆரியம்

41