பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரு சூரசேன சோழன் என்பார்
சோழன் என்பதும் அந்த சூரர் வழிப்பெயரே
மிகமிகப் பின்னால் முன்னாள் முருகனும்
வடபுலத்து ஆரியப் பூச்சுக்கு ஆளானான்
சரித்திரப் புகழ் கொண்ட தஞ்சைக்கு
முன்னைப் பழம் பெயர் ஆவூர் என்ப
தஞ்சன் என்றொரு சூரன் ஆண்டது
கொண்டு ஆனது தஞ்சாவூர்
இன்றய இசக்கியும் இயக்கரின் நிழலே
தக்கனும் ஒரு நாகனே அவன் பெற்ற தமிழ்மகளே
தாட்சாயணி சிவனை மணந்தாள் என்ப
மாமனை மருகன் அழித்தது பரணி
முன்னைத் தென்னிலங்கை மன்னவர் வரிசையில்
சிவன் சிவன் என்றே பெயர் தொடரும்
தாருக வனமென்பது ஒரு தண்டமிழ் வனச்சோலை
மயிலாடு துறைப் பகுதி. இன்னும் மறப்பில்லை
விரிசடைக் கடவுள் எரித்த திரிபுரமே
திரிசிர புரமானது பின் யுகத்தில்
இன்ன பழங்கதைக்குரிய தேவர்
வானவரன்று இன்றும் வாழ்கின்ற
மறவரினத்து தேவரின் முன்னவரே
பின்னை யுகத்தில் ஆரியம் இவற்றையும்
தன் கதையாய் மீண்டும் தந்தது நமக்கே.

43