பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொலைந்ததைச் சொல்ல தொல்லிலங்கை என்றான்
ஆநிரைக் கவர்தல் மகளிரைச் சிறை எடுத்தல்
பகைவரைப் போருக்கு அழைக்கும் மரபாதலின்
சீதையைச் சிறை எடுத்தான் மற்றபடி
அவள் மானத்துக்குத் தீங்கு இழைத்திலன்
சரித்திரச் சாயலே இதிகாசமாயிற்று
ராவணன் காலத்து வாலியும் வதைக்கப்பட்டான்
ராமனுக்கு அவன் பகை அன்று ஆயினும்
ராவணனுக்கு அவன் நண்பன் என்பதால்
சுக்ரீவன் சார்பில் சூழ்ச்சியாக
மறைந்திருந்து கொன்றான் இலக்கியம் மன்னிக்கவில்லை
நீதியின் குரல் ஏனென்று கேட்கின்றது
தண்டகன் தென்திசை வந்தபோது
கிஷ்கிந்தை அவனுக்கு சிற்றரசானது
அதனால் ராமனுக்கு வாலிமேல் ஆதிக்கம்
தம்பியிருக்கத் தாரத்தை பற்றியது
தவறென்பதற்கே வாலிவதம் என்பார்
இந்த வகையில் எத்தனையோ கதைகள்
தாடகை வதத்திலிருந்து சம்புகன் வதம்வரை
ஆதிவால்மீகி சீதையைத் தேடதென்பால்
அனுமனை ஆற்றுப் படுத்தும் போது
பொதிகையைச் சொல்லி பொன் வேய்ந்த
கபாடபுரத்தின் தொன்மையையும் சொல்லுகின்றார்
ஆதலின் ராமன் காலத்து மூதூர்

48