தலைசங்க காலக்கடல் துறைப் பட்டினம்
அலவாய் என்பதும் அறிய வருகின்றது
அறுபடை வீட்டில் ஒன்றென்னும்
செந்நிலம் பதியே கபாடபுரம்
வீர மகேந்திரம் என்று சொல்லுவார்
கந்த மாதனம் என்ற கரையாதகுன்று
செந்தில் ஓரத்தில் இன்றும் உண்டு
வள்ளிக் குகை என்று வழங்குகின்றார்
வடபுலத்தில் வந்து கலந்த ஆரியமும்
தென்புலத்து லெமூரிய வழிக்குலமும்
மோதிக் கொண்ட வரலாற்று நிழற்படமே
ராமகதை உள்ளிட்ட தேவாசுரப்போர்கள்
அசுர் என்றாலும் சூரியனென்றே பொருள் சொல்வார்
ஆரியக் கூற்றுப்படி அசுரர் அரக்கர்
வெறுப்புக்குரிய பழிப்புரை யானார்
இராவணன் குலத்துக்கு முன்னவன் புலத்தியன்
அன்னவன் பழந்தமிழ்ச் சித்தர்களில் ஒருவன்
இலங்கை குஞ்சரத்தில் இருக்கை கொண்டிருந்த
அகத்தியனுக்கு பெண் கொடுத்த மைத்துனன்
இந்த உறவில் இராவணன் அகத்தியனுக்குப் பேரன்
பாட்டனும் பேரனும் பாட்டிசைத்தப் போட்டியை
கந்தர்வத்தால் பிணித்த கதையாகத் திரித்தார்
பிரம்ம புத்திரரில் ஒருவனும் புலத்தியன்
பெயர் ஒற்றுமை கொண்டு மரபு வழியை மாற்றினார்
49