பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன் தந்தை இந்திரனுக்காக அமராவதி
பட்டினத்தைக் காக்கச் சென்றானென்று
பாரதமும் பரிந்துரைக்கும் சேதியுண்டு
பார்த்தன் தீர்த்த யாத்திரை யாக
தென்னகம் வந்துற்ற போது
நாகைக் கம்பள நாகன் மகளான
உலூபியை மணந்ததை பாரதம் சொல்லும்
பாரதப் போருக்கு களப்பலியான அரவான்
உலூபியின் மணிவயிற்றில் பிறந்த மகனே
நாகையை பாரதமும் உரகபுரி என்றே உரைக்கின்றது
தெற்கில் மணவூர் என்னும் மணிபுரத்தில்
மலையத்துவசன் மகளான அல்லியை
பார்த்தன் மணந்தான் பப்பரவாகன் அவன் மகனே
புலந்திரன் என்றும் புகலுவார் அவனை
பாரதப் போருக்கு ஒரு சேரன் சோறு கொடுத்தான்
மலையத்துவசன் மருகனுக்காக படை கொண்டுபோனான்
படுகளத்தில் பாட்டன் மாண்டதற்கு பகைத்து
ஒரு லட்சத்து நாற்பதாயிரம்
தேராளிகளுடனே படைநடத்தி
புலந்திரன் பாரத புரத்துக்குச் சென்றான்
பாரதம் முடிந்து படுகளமாய்க் கிடந்தது
பாண்டவ கவுரவர் பதினெட்டு
அக்குரோணி படைகளும் மாண்டதற்கு
காரணன் கண்ணன் என்பதறிந்து
துவாரகை மேல் படை நடத்தினான் என்பர்
மலையைக் கொடியுடைய மன்னவனை

52