பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலைச் சங்க நாட்கள்


நிலமகள் தனக்குத் தானே
சுழன்று கொள்வது ஒரு நாள்
நிலவும் நிலமகளை வலம் வருவதே ஒரு திங்கள்
தரைமகளும் கதிரவனைச் சுற்றுவதே ஓராண்டு
காலத்தை அளக்கின்ற கணக்கு இதுவே
முன்னையுகத்துச் சேதிகளை தேதியிட்டு
ஆண்டுக் கணக்கில் அளப்பதற்கு இல்லை
தனித்த சரித்திரமும் செழித்த பண்பாடும்
கொண்டு வளர்ந்த குமரித்திருநாட்டில்
தென்மதுரை மாநகரைத் தலைமை கொண்டு
காய்ச்சின வழுதிமுதல் கடுங் கோன் ஈறாக
நாற்பத்து ஒன்பதுபேர் அரசிருந்தார்
நாவலர் எழுவர் கவியரங்கேறினார்
நாலாயிரத்து நானூற்று நாற்பது யாண்டுகள்
தமிழுக்குப் பேரவை தலைச்சங்கமென்று
நடந்ததென்பார் வியப்பே சிறப்பே
திரிபுரம் எறித்த விரிசடைக் கடவுள்
குன்றம் எறிந்த குமரவேள் என்பார்
தேவரோ-தெய்வப் பெயர்தரித்த புலவரே
தமிழக்கு தாலேலோ பாடினார்
முரஞ்சியூர் முடிநாக ராயர் முதலாக
அகத்தியன் நிதியின் கிழவன் உள்ளிட்ட

55