பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற் சங்கத்துக்கு அவர் கொடுத்த புள்ளி
நாலாயிரத்து நானுாற்று நாற்பது யாண்டு
மூவாயிரத்தெழுநூறு யாண்டென்று
இரண்டாம் சங்கத்துக்கு எழுதிவைத்தார்
ஆயிரத்து எண்ணுாற்று ஐம்பது யாண்டு
முன்றாம் சங்கத்துக்கு அவர் செய்த முடிவு
மூன்று கணக்கையும் ஒன்று கூட்டினுல்
பத்தாயிரத்துக்கு ஒரு பத்தே குறைவு
பாரத நாளில் பரீட்சித்து கருவிலிருந்தான்
உதியன் சேரல் கரூரில் அரசிருந்தான்
முடிநாக ராயர் கவியரங்கிருந்தார்
மூவரும் ஒரு காலத்தவர் என்பது முடிவு
நக்கீரன் சொல்லிச் செல்ல வழிவழியே
முசிரி நீல கண்டனார் கொண்டுவந்த
மூன்று சங்கக் கணக்கையும் தொகுத்தால்
இன்றும் சங்கம் தொடர்ந்திருக்க வேண்டும்
நாற்பத் தொன்பது புலவரும் நம்மோடி ருக்கவேண்டும்.
இல்லை என்பதால் அவர்கணக்கு பிழை என்பதற்கில்லை.
கணக்கைப் பற்றியே கணக்கே பிழை
முற்றும் கற்பனை ஒப்புவதற்கில்லே என்பவர் உண்டு
இவர்களுக்குச் சான்றாக இன்னுமொரு கணக்கு
நிலம் தருதிருவின் நெடிய பாண்டியன்

57