பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சங்கத்தமிழ்

சகரக் கிளவி மொழி முதலாக தென்பதே
நம் முன்னோர் கொண்டிருந்த மொழி மரபு
அந்த இலக்கிய நியதிக்குப் புறம்பாக
காவலரும் பாவலரும் கலந்து தமிழாய்ந்த
பேரவையைச் சங்கமென்று சாற்றியது என்னோ?
தமிழ்க் கூடலுக்குரிய பெயர் மறந்ததோ
தமிழின் துறைவாய் என்பது மாய்ந்ததோ
நல்லாசிரியர் புணர் கூட்டென்ற சொல்லும் இல்லையோ
அவையம் என்ற பழஞ்சொல் வழக்கிழந்ததோ
தமிழ் கெழுகூடல் என்ற தனிப்பெயரும் இன்றில்லை
பொதியில் என்ற புகழும் போயிற்று
மன்றமும் அம்பலமும் மறந்தார் மறந்தார்
வடக்கில் போதி மரத்துப் புத்தன்
ஆரியத்தை எதிர்த்து அவை கூட்டினான்
அந்தக் கூடலுக்கு சங்க மென்று பெயர் சூட்டினான்
அவன் கொள்கைகளைக் கொண்டு சுமந்த
தொண்டர்கள் சங்கம் சரணமென்று சாற்றினார்
தொண்டு வளர்த்து தூதும் தொடர்ந்தபோது
தமிழ்ப் புலத்துக்குச் சங்கம் என்ற பெயரைக் கொண்டுவந்தார்
சமயக் கொள்கையில் அவரைச்சார்ந்த
தண்டமிழ் ஆசான்களும் தங்களையும்
சங்கமென்று சொல்லிக் கொண்டார்
சமயத் தொண்டுக்கு வந்த சமணரும்

60