பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலைச்சங்கப் பாடல்கள்


பஃறுளி ஆறு கடல் படுமுன்னே
முது குடுமிப் பெருவழுதி
முன்னீர் விழவின் நெடியோன்
நன்னீர் பறுளி மணலினும் பலவே என
வாழ்த்தும் நெட்டிமையார் பாட்டு
ஒரு தலைச்சங்கப் பாடல் ஆகும்
நெட்டிமை நெற்றிமையின் சொற்சரிவே
மூன்றாம் சங்கத்து முதுபெரும் புலவன்
மதுரைக் கணக்காயன் மாடன் நக்கீரன்
எதிர்த்து வழக்க்குரைத்த நெற்றிக் கண்ணனும்
நெட்டிமையார் வழித்தோன்றலே
தொண்டு என்பது ஒன்பதாக வழங்கிய வழக்கு
தலைசங்க நாட்கணக்கு ஆதலின்
தொடித்திரிவன்ன தொண்டு படுதிவவென
ஆளும் மலைபடுகடாம் ஒரு தலைச்சங்க நூலே
ஊன் பொதி பசுங்குடையாரின் பாட்டொன்று
சீதை சிறைபோன வழித்தடத்தில்
சிந்திய நகைகளை குரக்கின மாதர்
அணியத் தெரியாது அணிந்தாரென்று
அகச் சான்றாக உதாரணம் காட்டும்
இதுவும் ராமன் காலத்து பாட்டாதலின்
தலைசங்க வரிசையில் இடம் பெறுவதே,

63