பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சரித்திரக் கணக்கு


ஈழத்து வரலாற்றுக் குலமுறையைக் கிளத்துகின்ற
மகா வம்சம் தீப வம்சங்கள்
தென்புலத்தை கடல்வெள்ளம் மூன்றுமுறை
விழுங்கிய பெருங் கொடுமையைச் சொல்லும்
முதலாவது கிருஸ்துவுக்கு முன்னால்
இரண்டாயிரத்து முன்னூற்று எண்பத்தேழு
இதுவே எபிரேயர் சொல்லி வைத்த
நோவா காலத்து நாற்பது நாள் பெருமழை
உலகை அழித்த பெருவெள்ள மாகும்
தென்புலத்தில் எஞ்சிய பகுதியே
களவியலுரை கட்டுரைத்த நாற்பத்தொன்பது நாடுகள்
இடைகழி நாடும் தொல்லிலங்கையும் புறத்தீவுகளாயின
குமரிக்கோட்டுக்கு வடக்கில் தொடர்ந்த
மேலைச் சாரலே கொல்லங்கரை
புதியதொரு தலைநகர் தென் மதுரையானது
இந்த வரலாற்றின் தொடக்கநாள் கி. மு.
இரண்டாயிரத்து முன்னூற்று எண்பத்து ஏழு
தலைசங்கமும் தழைத்த தமிழும்
தமிழனின் செழித்த வாழ்வும்
தென்பாலி உள்ளிட்ட தென்மதுரை அரசும்
மீன்டும் வெள்ளத்துக்கு விருந்தானது.
இந்த வீழ்ச்சியையே சிலம்பின் செல்வன்

67