பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கமும்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதென்றார்
ஈழத்துக் கணக்குப்படி இது நிகழ்ந்தது
கிருஸ்துக்கு முன்னால் ஐநூற்று நான்கில்
ஆக தலைச்சங்க நாட்களென்னும்
தமிழுக்கு மூத்த வரலாற்றுக் காலம்
ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து மூன்று
ஆண்டுகளே இந்த நெடிய காலத்தில்
எண்பத்து ஒன்பதின்மர் அரசு கட்டிலேறினார்
கடைசிக் காவலன் கடுங்கோன் ஆவான்
வெள்ளத்தில் பிரிந்து வேறான பகுதி
ஈழத் தீவான தெங்க நாட்டுத்திட்டே
சேரத்தீ வென்றும் சொல்லுவார்
நெடு நிலம் கடல்படு முன்னே தென்பொருணை
முக்காணி கடந்து கொற்கையை ஊடுறுவி
நாகநன்னாடு எனும் ஈழத்துப் பாய்ந்து
வளம் கொழித்தது, கொண்டு இலங்கையை
சீனர் தாம்பிர பரணிகே என்றார்
பனைநாட்டுப் பகுதியே செந்தில் ஓரம்
சாலமன் கலங்கள் வந்து நின்ற
உவரித் துறையும் இந்த ஓரமே
வடக்கில் சிந்து அழிந்தபின் இந்து வெளிக்குள்
ஆரியம் புகுந்த நாட்களும் அதுவே.

68