பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சந்தித்தாரென்பது இதிகாசம்
மேலும் சமணத்து சரித்திர நாயகன்
இருபதாம் தீர்த்தங்கரர் முனிசுவர்த்தர்
இராமன் காலத்தவரென்ப
இருபத்திரண்டாம் தீர்த்தங்கரர் நேமி நாதர்
இதன் படிக்கு கிடைக்கின்ற இடைவெளி
இரண்டே தீர்த்தங்கரர் என்பதால்
ராமன் கண்ணன் இருவேறு யுகத்தவரல்ல
ஒரு காலத்து மூத்தோர் இளையவரே
கண்ணனுக்கும் சமணத்தில் வசுதேவ வரிசையுண்டு
ஒரே நூற்றாண்டில் உள்ளான இடைவெளியே
வியாசன் இருந்ததும் இதே நூற்றாண்டு
மூன்றான வேதத்தை நான்காக வகுத்தான்
பாரதம் நடந்த பதினான்காம் நூற்றாண்டில்
தென்புலத்தில் சேர சோழ பாண்டியர்
செழித்திருந்ததே இலக்கிய மாகும்.
தென்னிலங்கை வேந்தன் ராவணன் மாண்டதும்
அதே நூற்றாண்டில் கொஞ்சம் முற்படவே
தமிழ் நான்மறையின் வழிமுறையில்
வேத விளக்கம் செய்து உபநிடத மென்றார்
தென்புலத்து அந்தண மறையாளர் தொகுத்த
பிரமாணங்கள் பலப்பல வேதத்திலுண்டு
ஆரியர் கொண்டுவந்த தோத்திரத் தொகுப்பும்
இங்கே கொண்டு கூட்டி எழுதிச் சேர்த்த
புதிய பகுதிகளும் திரண்டதே வேதம்

70