பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டவ திருக்குலத்தைக் கருவறுத்தான் அசுவத்தாமன்
இரண்டும் பூபாரம் தீர்த்த புண்ணியமே
ஆக அவதாரம் பத்தும் ஆயிற்று ஆயிற்று
பத்தாவது பிறப்பு இனிமேல் எடுப்பது என்பார்
கல்கி புராண கதையின் படிக்கு
கலியின் பிறப்போடு கல்கியும் பிறந்து போனான்
அவனுக்கு ஆசான் பரசுராமன் என்பதால்
முன்னேயுகத்துக்கு முன்னவனான பரசுராமன்
பின்னையுகத்துக்குப் பின்னாலும் பிறந்து வருவனோ
புராணயுகமே போயிற்று போயிற்று
கல்கிக்குக் குதிரைவடிவம் கற்பித்துள்ள படியால்
அசுவத்தாமனே அந்த அவதாரமாவான்
ஆக உயிர்க்குலத்து வளர்ச்சியை
புராணவழியில் புகலுவதே தசாவதாரம்.

7