பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வருங்கால மானிட சமுதாயம்




18, 19ஆம் நூற்றாண்டுகளில் முதலாளியம் வளர்ச்சி பெற்று வந்தபோது நிலவிய நிலைமைகளிலிருந்து, அடிப்படையிலேயே வேறுபட்ட நிலைமைகளின் கீழ்தான்் புதிதாக விடுதலை அடைந்த நாடுகள் வளர்ச்சி பெறுகின்றன. அவை முழு நிறை முதலாளிகளோடு எதிரிடை முடிவதல்லை அவை ஏனைய மக்களை அடிமை கொண்டும் முதலாளியத்தை வளர்த்துக் கொள்ள முடியாது, இறுதியில் "தேசிய முதலாளியவம்" தனியதிகாரத்தின் ஆதரவையே நாட நேர்ந்து விடும்.

முதலாளியமற்ற வளர்ச்சிப் பாதையை, சமன்மைப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள மக்களுக்கு வருங்காலம் வழங்க இருப்பவை என்ன?

சமுதாய உரிமை
பொருளியல் பெருவளர்ச்சி
தேசியச் செல்வ வளம்

சமன்மை மாந்தனை மாந்தன் சுரண்டும் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளிவைப்பதன் மூலம், சுரண்டும் வகுப்புகள் என்றென்றும் கடைப்பிடித்து வந்த வண்ண இன அல்லது தேசிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் ஒழித்துக் கட்டி விடுகிறது, அது மக்களுக்கு உண்மையான உரிமையை உறுதி செய்கிறது; மேலும் உறவுற்ற உரிமையும் சமன்மையும் உண்மையில் கண் கண்ட உரிமையாக மாறச் செய்கிறது. அது அவர்களின் அரசியல், பொருளியல், பண்பாட்டு வளர்ச்சியை உறுதி செய்கிறது பொருளியல் பண்பாட்டு வளர்ச்சியின் வளர்ந்தோங்கும் நிலையும், அரசை ஆட்சி செய்யக் கூடிய தேசிய வல்லுனர்களைப் பயிற்றுவிப்பதும், உண்மையான உரிமையையும் தன்னிச்சையுைம் எய்துவதை எளிதாக்குகின்றன.

செழித்தோங்கும் பொருளியல், பண்பாடு ஆகியவற்றோடு, தேசிய மரபைப் பாதுகாக்கவும்,