பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஐயோ ஐயோ!" என்று அலறிக் கொண்டு துள்ளி எழுந்தான் அவன். கைகளால் நெடுகிலும் தேய்க்க முயன்றான். எனினும் பூச்சிகள் வேகமாக ஊர்ந்து படர்ந்தன. பெரிய பூச்சி கூட-"அவனைத் துரத்தி வந்தது.

செய்யும்வகை புரியாதவனாய் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு கைகளை ஆட்டி அசைத்து, "ஐயோ, ஐயோ!" என்று கூச்சலிட்டபடி ஒடலானான் அப்பாவி சிதம்பரம்.