பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|வல்லிக்கண்ணன் च्चि_ल्लत_43] சூரியன் பிள்ளைக்கு இந்த வழி மிகவும் பிடித்துவிட்டது. சுலப சாத்தியமானதாகவும் தோன்றியது. அந்தத் தடிப்பன்றி அந்திநேரத்தில் தானே ஆஜராகிறது? சாயங்காலம் அஞ்சு மணியிலிருந்தே வெந்நீர் தயாராக இருக்கவேண்டும் என்று உத்திரவிட்டார் அவர்.

தொழுவத்தில் அடுப்புக் கட்டிகள் மீது ஒரு கொப்பரை நிறையத் தண்ணீர் தோட்டத்தில் அடுப்புமீது ஒரு "அண்டாவிலே தண்ணீர் வாசலில்திண்ணை ஓரத்தில் விசேஷமாக அடுப்பு அமைத்து அதான் மீதும் ஒரு கொப்பரைத் தண்ணீர் இவற்றைச் சூடுபடுத்தத் தனித்தனி ஆட்கள். அருகிலே கைக்கு வசதியாக வாளி செம்பு வகையரா. தீவிரமாகச் செயல் புரிவதற்கு வழி கிடைத்துவிட்ட உற்சாகத்திலே திட்டம் தீட்டினார் பண்ணையாளர்.

இவ்விஷயம் வேலையாட்கள் எல்லோர் காதுகளையும் எட்டியது. ஒவ்வொருவரும் பண்ணையாரின் போக்கைப் பற்றி ஒவ்வொரு விதமாகப் பேசினார்கள். ஆயினும் அதிசயம் நிகழாது போகவில்லை.

வெந்நீர் தயாரிக்கத் தொடங்கிய நாளிலிருந்து தடிப் பன்றி தலைகாட்டாமலே போய்விட்டது. ஒருநாள். இரண்டு நாள். ஒரு வாரம்-ஊம் ஹ9ம், அது விஜயம் செய்யவே இல்லை.

"வெந்நீர் வைத்தியம் பற்றி பண்ணியா பிள்ளைக்கு தெரிஞ்சு போச்சு அதனாலதான் அவரு பயந்துபோயிப் பம்மிகிட்டாரு என்று பண்ணையார் மாணிக்கத்திடம் சொன்னார். ரசித்துச் சிரித்தார்.

அதற்காக வெந்நீர் தயாரிப்பை நிறுத்திவிடவில்லை அவர் அதுபாட்டிற்கு ஒழுங்காக தினந்தோறும் மூன்று கொப்பரை நிறைய வெந்நீர் கொதிக்கக் கொதிக்கத் தயாராகி வந்தது. பண்ணையாருக்கு என்ன விறகு இல்லையே என்ற கவலை ஏற்படப் போகிறதா? தண்ணீர் கஷ்டமா? இல்லை, வேலை ஆட்களுக்குத்தான் குறைவா? ஆகவே தினசரி சாயங்காலம் வெந்நீர் தயாராகிக் கொண்டிருந்தது.

"வரும் வரும். என்றாவது ஒரு நாள் அந்தத் தடிப்பண்ணி திரும்பவும் வராமலா இருந்துவிடும்? அப்ப பார்த்துக்கொள்வோம்" என்று நம்பியிருத்தார் பண்ணையார். -

அவர் நம்பிக்க்ை வீண் போகவில்லை.