பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடலைமுத்து சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக ஒரு சமயம் அவர் அவனைச் சாட்டையில் அடித்ததும், இன்னொரு தடவை அவனைப் பட்டினிபோட்டதும் அவர் நினைவுக்கு வந்தது. "அதுக்கெல்லாம் சேர்த்து, பயல் நமக்குப் பாடம் கற்பிக்க ஆசைப்பட்டான் போலிருக்கு அவனே சரியானபடி பாடம் படித்துவிட்டான் என்று எண்ணினார் பிள்ளை. வாய்விட்டுச் சிரித்தார். "அடேய் பண்ணிப் பயலே உனக்கு ஏன்லேய் இந்தப் புத்தி வந்தது?" என்று கேட்டுவிட்டு. மேலும்சிரித்தார் பண்ணையார்

>}: