பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கு. ப. ராஜகோபாலன் எதற்காக?. பாம்பே, படமெடுத்து நீ ஏன் இப்படி மகுடிமுன் மெய்மறந்து ஆடுகிறாய்? பாம்பாட்டிக்கு பிழைப்பளிக்கவா? இல்லை, இல்லை! - ஆடி யாடி புன் ஆவலை தீர்த்துக்கொள்ள. ராதே! குழலோசை கேட்டு நீ காதல் கொண்டு கானகமெல்லாம் ஏன் ஓடுகிறாய்? கண்ணனுக்குக் கண்ணோக்கின்ப மளிக்கவா? இல்லை, இல்லை! w ஓடியோடி யுன் உள்ளப் பூரிப்பை கொட்ட! பெண்ணே, புருஷனுக்கேன் இப்படிப் பணிந்து அடிமைபோல் இட்டதெலாம் செய்கிறாய்? 'பண்ணு' என்று சொல்லும் புருஷனுக் கஞ்சியா? இல்லை, இல்லை! இட்டதைச் செய்துசெய்து உணர்ச்சியை அடக்க! L]ü工诰