பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துேக்குட்டி & 20 ஒருநாள் மீனுக்குட்டி முகவாட்டத்துடன் வீடு திரும்பினாள். 'ஏன், என்ன நடந்தது? என்று அம்மா விசாரித்தாள். 'பாவம், பத்மா ! இன்னிக்கு டீச்சர் அவளை ரொம்பவும் கோபித்து அதட்டினார்கள். வெளி வாசல்படி அருகேயே நிறுத்தி வைத்து விட்டார்கள். இனிமேல் இது மாதிரி எல்லாம் செய்தால், நீ இங்கே வரவேபடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள், என்றாள் மீனு, "ஏனாம் ? 'சரசு என்கிற சின்னப் பெண்ணைப் பத்மா பிடித்துத் தள்ளினாள். சரசு கீழே விழுந்ததிலே மூக்கில் பலமா அடிபட்டு ரத்தம் வந்தது. எவ்வளவு ரத்தம்கிறே-யேயம்மா!' என்று மீனு விளக்கம் கூறினாள். வேண்டியதுதான். அந்தப் பத்மாக் குரங்குக்கு இது சரியான பாடம்தான், என்று மீனு அழுத்தமாய்க் கூறினாள். மீனு பத்மாவுக்காகப் பரிந்து பேசாமல் போனது அம்மாவுக்குச் சிறிது ஆச்சரியம் தந்தது. இதற்குப் பின்னர், மீனுக்குட்டி பத்மா பற்றி அதிகம் பேசவில்லை. அவள் பேச்சில் பத்மா வந்தால் கூட, இப்போது புதிய பத்மா போல் தோன்றலானாள். அந்தச் சுட்டிப் பெண் திருந்தி விட்டாள்-திருத்தப்பட்டு விட்டாள்என்றே அம்மா எண்ணினாள். அதற்காக டீச்சரை நேரில் பாராட்ட வேண்டும் என்ற ஆசை கூட ஏற்பட்டது அவளுக்கு. ஆனாலும், அப்படிச் செய்வதற்கு தேவையான நேரம்தான் கிடைக்கவில்லை. முடிவில், மீனுவின் அம்மா மழலையர் பள்ளிக்கு அவசியம் செல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்து சேர்ந்தது. பள்ளியில் பெற்றோர் தினம் கொண்டாடப் பட்டது. அதற்கு அந்த அம்மாளும் போனாள்.