பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5EEಡ್ತ & 66 அவள் உன்னைப் பற்றியே சதா பேசணும்! பேசாத போதெல்லாம் அவள் உன்னை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள் என்று எனக்குப் படுது. செல்லம் மாதிரி ஒரு பெண் உன்னைப்போல ஒரு பிள்ளையாண்டானிடம் வெறுப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வது கூட, தனக்குள்ள விருப்பத்தை வெளியிடுகிற தந்திரம் தான். அவளை அறிந்தோ அறியாமலோ செய்கிற காரியம் அது” என்று எடுத்துச் சொன்னார். முருகையாவின் சம்மதத்தைப் பெறாமல் போகவில்லை தேவர். கடைசியாக அவர் சொன்னார் : "முருகா, சண்டைச் சேவலை வளர்க்கிறதிலே ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கணும். வெற்றி பெற வேண்டிய சேவல் - எல்லாவற்றையும் தோற்கடிக்கக் கூடியது-பெட்டைகள் பக்கத்திலே போகவே கூடாது.” “வேலன் அப்படி நடந்து கொள்ளவே இல்லையே! பெட்டைகள் இருக்கிற திசையைக்கூட எட்டிப் பார்த்தது இல்லையே!” என்றான் முருகையா, "இருக்கலாம், முருகா! ஆனால், அது இருந்த திக்கிலே பெட்டைகள் எட்டிப் பார்க்காதபடி நீ கவனித்திருக்க மாட்டே!" என்று சொல்லிச் சிரித்தார் தேவர். y; "இல்லியே.வந்து. "இந்த உலகத்திலே நீ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ரொம்ப இருக்குது, தம்பி!” என்று சொல்லி, சிரித்துக் கொண்டே போனார் தேவர். முக்கத்தேவரின் பேச்சு நியாயமானது தான் என்பதை முருகையா அடிக்கடி உணர முடிந்தது. செல்லம் அவன் துணைவியாகி அவனோடு வாழ வந்த பிறகு அதற்குரிய அவசியம் நிறையவே ஏற்பட்டது. முக்கியமாக ஒரு ரகசியத்தை வெளியிட்ட போது, அவன் தனது