பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை வாழ்வு | ** 72 இருக்கின்றன. ஆயினும் பஸ் முன்னேற முடியாது திணறுகிறது. வீமன், ஹெர்குலிஸ் போன்ற பலசாலிகளின் தம்பியாகி விட்டார் கி. பிள்ளை. அவர் விளையாட்டாகப் பிடித்திழுத்து நிறுத்தியிருக்கிறபோது, பஸ் திமிறிக் கொண்டு ஒடிவிட முடியுமா என்ன? பஸ் முன்னேற இயலாது உறுமுவதையும், டிரைவரும் பிரயாணிகளும் திகைத்துக் குழம்புவதையும் கவிக் கண்ணால் காணும் கிருஷ்ன பிள்ளைக்குச் சிரிப்பாணி அள்ளிக் கொண்டு வருகிறது. அருவி மாதிரிச் சிதறி உருளுகிறது. தெருவோடு போகிறவர்கள், விஷயம் புரியாமல், ஆசாமிக்குப் பைத்தியம் போல் இருக்கு ' என்று எண்ணினால், அதற்குப் பிள்ளை அவர்களா பொறுப்பு? கிருஷ்ண பிள்ளையின் உள்ளம் கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் ! அங்கே குமிழியிடுகிற எண்ணங்களை, கனவுகளையெல்லாம் அவர் எடுத்துச் சொல்வதில்லை. சொன்னால் புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல்தான் மற்றவர்களுக்குக் கிடையாதே! வெயில். நல்ல பட்டனத்து வெயில், காரோடும் பெரிய ரோடுகளில் தார் இளகி ஓடும். அங்கங்கே ஒடும் நீர் போல் கானல் ஜாலம் காட்டும். எல்லோர் மீதும் வேர்வை கொட்டும். வெயிலை நிலவென மதிப்பார் போல, ரஸ்தா ஒரத்தில் நடந்து கொண்டிருப்பார் கி. பிள்ளை. அவர் உள்ளம் சொல்லும், ஆகா, வெயில் எவ்வளவு அழகாக இருக்கிறது! வெயில் வெகு நன்று. அது மிக இனியது என்று. இதை வாய்விட்டுச் சொன்னார் என்றால், எவர் தான் அவரைப் பாராட்டத் தயாராக இருப்பர்? ஒளி மயமாய் மிளிருகின்ற விரிவெளியை, நீல வானை, வெயிலொளியில் மின்னுகின்ற மரங்களின் பசிய இலைகளை, வண்ண வண்ணப் பூக்களை, பளிச்சிடும் கட்டிடங்கள், கார்கள்,