பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鷺 வல்லிக்கண்ணன்

வாழ்க்கை இனியது. அதை நேசிப்போம். அன்பும் நட்பும் வாழ்க்கைக்கு மாண்பு அளிப்பவை. அவற்றைப் போற்றி வ:ர்ப்டோம்.

  • M. w * r^。 - வாழ்த்துவோம். வாழ்வோம். வாழ்வோம். வளர்வோம்.

வளர்வோம். வெல்வோம்.

அன்பு

©#. $.

கி. பூரீதர்

- j4-5-94

அன்பு மிக்க பூரீதர், வணக்கம். நீங்கள் கூரியர் மூலம் அனுப்பிய கவிதை பற்றி புத்தகம் உரிய நாளில் கிடைத்தது. நன்றி. மகிழ்ச்சி. -

காஞ்சனை அறிக்கையும் உங்கள் கடிதமும் படித்து சந்தோஷம் அடைந்தேன்.

திருநெல்வேலியில் இருந்துகொண்டே மிகச் சிறந்த சினிமாப் படங்களைக் கண்டுகளிக்கும் வாய்ப்பையும் வசதியையும் காஞ்சனை ஏற்படுத்தித் தருவது அருமையான பணியேயாகும். இதுவரை திரை விட்ட படங்கள்' பலவற்றையும் நீங்கள் பார்த்து ரசித்திருப்பீர்கள், பாக்கியசாலி நீங்கள்.

எனது 1-4-94 கடிதத்தை அடுத்து ஒரு கடிதம் உங்களுக்கு எழுதவேண்டும் என்று எண்ணியிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் 'சினிமாவுக்கு வயது நூறு' என்று பல பத்திரிகைகளிலும், திருவனந்தபுரம் பட விழா பற்றிய கட்டுரைகள் வந்திருந்தன. சில முக்கியப் படங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தன. லூமியர் சகோதரர்களின் முதன்முதலான துண்டுப்படங்கள், மிகப்பிரசித்தி பெற்ற ஐசன்ஸ்டீனின் பேட்டில்ஷிப் பாட்டம்கின், டி சிக்காவின் பைசைக்கிள் தீஃப் பற்றி எல்லாம் எழுதியிருந்தார்கள். இவற்றை எல்லாம் நீங்களும் பார்த்திருப்பீர்கள். இவற்றை எல்லாம் பார்க்கக் கொடுத்து வைத்த நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் என்று எழுத விரும்பினேன். ஆனாலும் எழுதவில்லை.

தொடர்ந்து பத்திரிகை பின் பத்திரிகையாக பிரமாதப்படுத்தி