பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 4姆

சென்னை.

荔2一浮一94

அன்பு மிக்க நண்பர் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் 4-1-94 கடிதம் கண்டு, நிலைமைகள் அறிந்தேன். எண்னங்கள், விருப்பங்கள், ஆசைகள், திட்டங்கள் நிறைவேறுவதற்கு எவ்வளவோ தடங்கல்கள் குறுக்கிடுகின்றன. பனம் பெரிய தடங்கல்தான். பொருளாதார பலம் இல்லாத போது, பிறர் உதவியை, தயவை எதிர்பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது. காலம் கனியும் வரை காத்திருப்பது தவிர வேறு வழியில்லை. புது வருடம், உங்கள் முயற்சிகள் வெற்றி பெறுவதற்குத் துணைபுரியட்டும். 8-ம் தேதி, நண்பர் விக்கிரமன் அவர்களுடன் நீங்களும் பிறரும் பாண்டிச்சேரி போய், அங்கு கிளைச்சங்கம் துவக்கவிழாவை சிறப்பாக நடத்திமுடித்து. மகிழ்ச்சியோடு சென்னை திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். இனிய நண்பர் எம். எஸ். தியாகராஜனுக்கு அன்பு வணக்கம். தி. க. சி அடிக்கடி கடிதம் எழுதுகிறார். நலமாக இருக்கிறார். சமீபத்தில் டாக்டரிடம் பரிசோதித்துக்கொண்டார். நார்மல் ஆக இருப்பதாக டாக்டர் கூறினாராம். உங்கள் அன்பு விசாரிப்பை அவருக்குத் தெரிவிப்பேன்.

அன்பு

Éli, &#;.

முஸ்தபா

சென்னை,

1-12-93

அன்பு மிக்க முஸ்தபா,

வணக்கம்.

உங்கள் 13-11-93 நீண்ட கடிதத்துக்கு நன்றி. 26-ம் தேதிக் கடிதம் நேற்று கிடைத்தது. சந்தோஷம்.

முதல் கடிதத்தில் உங்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தது மகிழ்ச்சி தந்தது. அதைப்படித்ததும் உங்களைப் பற்றி கெட்ட அபிப்ராயம் ஏற்படலாம் என்று நீங்கள் சந்தேகப்பட்டிருந்தீர்கள்.