வல்லிக்கண்ணன்
- 2
சென்னை.
31-#0-89
அன்புமிக்க நண்பர்,
வணக்கம். உங்கள் 25-10-89 கடிதம் 30ம் தேதிதான் வந்த சேர்ந்தது. ஏதோ தாமதமாகவாவது கிடைத்ததே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான். இப்போதெல்லாம் தபால்கள் தட்டுக்கெடுவதும், தவறிப்போவதும் சகஜ நிகழ்வுகள் ஆகிவிட்டன.
போன வாரம் உங்களுக்குக் கடிதம் எழுதலாம் என்று நினைத்தேன். ஒருவேளை பள்ளி விடுமுறையில் ஊருக்குப் போயிருக்கலாம் என்று எண்ணி கம்மா இருந்துவிட்டேன்.
ஆகஸ்ட் 1:முதல் செப்டம்பர் 21 முடிய தான் கோயமுத்துரில் தங்கியிருந்தேன். ஆகஸ்ட் 12 அன்று கம்பராயன் என்ற எழுத்தாளரின் கதைப் புத்தகம் வெளியீட்டு விழா. 15ல் வேறொரு புத்தக வெளியீடு. செப். ல்ே தாராமதி என்ற சிறுபத்திரிகை நடத்தும் ராமரத்தம் (இவர் தமிழ்நாடு எழுத்தாளர் உறவு மாநிலப் பொருளாளர்) மணிவிழா. இடையில், செப். 6ம் தேதி ராமரத்தமும் நானும் அரக்கோணம் போனோம். பஸ்ஸில், வண்டு என்ற சிறுபத்திரிகை நடத்தும் னிவாசனுக்கு திருமணம், அதை ஒட்டி இலக்கிய நிகழ்ச்சிகளும் * , சய்திருத்தார். வேலூர் வரை பஸ் வசதி இருந்தது. இரவு ட்டதால், அரக்கோணத்துக்கு பஸ் இல்லை. ாலாஜா ரோடு போய், லாகியில் போகமுயன்றோம். லாரியில் ஏறியபோது நான் தவறி விழுந்தேன். நல்லவேளையாக பின் நின்ற நண்பர் தாங்கிப் பிடித்துக்கொண்டார். இல்லையேல் மண்டையில், முதுகெலும்பில், அடிபட்டிருக்கக்கூடும். இப்போது, இடது கால் மட்டும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. கால் சக்கரத்தில் சிக்கியதால், உடனேயே மணி இரவு 1) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். கு. அரக்கோணத்துக்கு ரயிலில் போனோம். 8-ம் தேதி கோவை சேர்ந்து, சிகிச்சையை தொடர்ந்து பெற்றேன். கால்காயம் ஆறிவிட்டது. மெதுமெதுவாகக் குணம் கண்டது. ஒன்றரை மாத காலம் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போனேன். சரியாக நடக்கமுடியாததால், இப்பவும் காலில் சிறிது வீக்கம் இருக்கிறது. சகஜமாக நடப்பதற்கு இன்னும் சில நாட்கள் பிடிக்கும். என் அண்ணாவும் குடும்பத்தாரும் சுகம். நீங்கள், மனைவி, குழந்தை நலமாக இருப்பதை அறிய மகிழ்ச்சி. நண்பர் ஜெயபாலுக்கு என் அன்பு திரு. பாரதிசங்கர் ஒருநாள் இங்கே வந்துபோனார். பத்திரிகை புத்தக உலகம் வழக்கம்போல் இருக்கிறது. காலச்சுவடு-7 படித்தேன்.
- あ
அன்பு
iெ, 9,