பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இச்சிறு தொகுப்பில் உள்ளவை வல்லிக்கண்ணன் கடிதங்களின் சிறிய சாம்பிள் தான். பல்வேறு ரசங்களையும் சுவைகளையும் குணாம்சங்களையும் கொண்ட எண்ணற்ற கடிதங்கள் தி.க. சிவசங்கரன், முத்தமிழ் கலாவித்வ ரத்ன அவ்வை டி.கே. சண்முகம், எழுத்தாளர் ஆதவன் (கே. எஸ். கந்தரம் வண்ணதாசன், மற்றும் சில நண்பர்களுக்கு, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை - காலவெள்ளத்தோடு அடிபட்டுப் போனவை தான். இழப்பு' கணக்கில் எழுதப்பட வேண்டியவை அவை. இக்கடிதங்களை சேகரம் செய்ய வருடக்கணக்கில் தன் காலத்தையும் உழைப்பையும் ஈடுபடுத்தி முயன்று வெற்றி கண்டுள்ள என் இனிய நண்பர் மு. இராமலிங்கத்துக்கும், வேர்கள் இயக்க நண்பர்களுக்கும் என் நன்றி உரியது.

வல்லிக்கண்ணன்.