பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையான பெரிய மனிதர்

இந்த ஊரில் ஒருவர் பெரிய மனிதராக விளங்க வேண்டும் என்றால் அவருக்கு மூன்று தகுதிகள் இருக்கவேண்டும். ஏதாவது ஒரு நிறுவனத்தின் தலைவராக இருக்க வேண்டும் அவர். உள்ளூர் பார்பர் அவர் வீடு தேடிவந்து, காத்திருந்து தலைமுடி சிங்காரிப்பு - முக ஒப்பனை முதலிய வேலைகளைக் கவனித்து விட்டுப்போக வேண்டும். மூன்றாவதாக, அவர் ஒரு வைப்பாட்டி வைத்திருக்க வேண்டும். இந்தத் தகுதிகளைப் பெற்றிருப்பவர்களைத் தான் இங்கே பெரிய மனிதர்களாக மதிப்பது வழக்கம். இந்த வட்டாரத்தில் பெரிய மனிதர் அந்தஸ்து பெற்றிருக்கிற ஒவ்வொருவருக்கும் இம்மூன்று தகுதிகளும் இருக்கின்றன.

இப்படிச் சொன்னார் ஒரு நண்பர் தமது ஊரைப்பற்றி:

பார்க்கப்போனால் எல்லா ஊர்களுக்கும் பொருந்துகிற ஒரு பொதுஉண்மையாகவே இது அமையும். பெரியமனிதப் பம்மாத்துப் பேர்வழி களும், அவர்களுக்குத் துதிபாடுகிற அடியார் கூட்டமும் நாட்டில் அதிகரித்துவிட்டது. வியப்பர்களின் நோக்கில் எது எதெல்லாமோ அரிய பெரிய சாதனைகளாகவும் அசகாய சூரத்தனங்களாகவும் தென்படுகின்றன.