பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 125

கிடக்கும் அற்புதம் இந்த உடல், இன்பங்கள் தரக்கூடிய இன்ப உணர்வு பெற்றவர்கள் பெண்கள். இன்பத்துக்கு வழிசெய்யும் உடலுக்கு ஆனந்த விருந்தளிக்கும் இன்ப ஊற்றுக்களான பெண்களில் எத்தனை பேரை கூடிக்களிக்க இயலுமோ அத்தனை பேருடனும் உறவாடி மகிழ்வோம். அவர்களுக்கும் மகிழ்வு அளிப்போம்.

ஆகவே காஸனோவா வாழப் பிறந்தவன். வாழத் துணிந்தவன். வாழத் தெரிந்தவன். வாழ்ந்து மகிழ்ந்தவன்.

வெட்கம் அவமானம் - இவ்வார்த்தைகள் அவன் அறியா தவை. ஏனெனில் இந்நுண் உணர்வுகள் அவன் உடம்பில் படிந்திருக்கவில்லை. எதையும் இயல்பாகவே அவன் சொல்வான். செய்வான். சூதாடும் போது நீ கள்ள ஆட்டம் ஆடினாயே என்று குற்றம்சாட்டப்பட்டபோது, ஆமாம் அதனால் என்ன? எனக்குப் பணம் தேவைப்பட்டது என்று சொன்னவன் அவன். யாரோ ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டதாகப் பேசப்பட்ட போது, அவளுக்கு நான் ஜாலி அனுபவம் கற்றுக் கொடுத்தேனே என்று சிரித்தபடி சொன்னவன் அவன்.

அதுதான், அவனுக்கு மனச்சாட்சி, அறநெறிக் கட்டுப் பாடுகள் என்பது எதுவுமே கிடையாது. அவன் தன் கடந்தகாலச் செயல்களுக்காக வருந்தவில்லை. தன்னைப் பாவி என்று அலுத்துக் கொள்ளவில்லை. தான் வேறுவிதமாக வாழ்ந்திருக்கலாமே என்று எண்ணவே இல்லை. நான் இன்று பணக்காரனாக இருந்தால், என்னை நானே குற்றவாளி என்று மதிப்பிடவேண்டியதுதான். ஆனால் இன்று என் கையில் காசு எதுவும் இல்லை. கிடைத்ததை எல்லாம் அவ்வப்போது தாராளமாக அள்ளி வாரி இறைத்து விட்டேன். இது எனக்குப் பெரும் ஆறுதல் என்று அவன் தன் சுய சரிதையில் குறிப்பிட்டிருக்கிறான்.

வருங்காலத்துக்கு வேண்டும் என்று அவன் சொத்து சேர்த்ததுமில்லை. செத்ததற்குப்பின் நன்னிலை அடைய வேண்டும் என்று அஞ்சி இஷ்டங்களைப் பூர்த்தி செய்யாமல் விட்டுவிடவு மில்லை. அவனது எழுபத்துமூன்று வருட வாழ்க்கையில் இறுதியில் மிச்சமிருந்தது அவனது அனுபவ நினைவுகள்தான். அவற்றையும் அவன் தன்னுள் அடக்கி மக்கிப்போக விடவில்லை. உள்ளது உள்ளபடி தாளிலே அள்ளி இறைத்துவிட்டான். அதனால் அமரப் புகழ் பெற்றான்.

ஐயா, உலகத்தில் உயர்வு தாழ்வுகளே மிகுந்திருக்கின்றன. சிலபேர் ஜோராக டிரஸ் செய்து, சோம்பித் திரிந்து ஜாலியாக வாழ்கிறார்கள். வாகனங்களில் உல்லாசமாகப் போகிறார்கள். பலபேர் அழுக்கு உடையும், வெறும் வயிறுமாய் இருக்கிறார்கள்.