பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வல்லிக்கண்ணன்

மெதுமெதுவாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இயந்திர வேகத் தோடு உற்பத்தி செய்து பரப்பப்படுகிற வணிகநோக்குப் பெரும் பத்திரிகைகள் பொழுதுபோக்கிற்குத் துணைபுரிகிற ஆழமற்ற, மேலோட்டமான, சிந்தனைக்கு வேலைவைக்காத, கிளுகிளுப்பு ஊட்டுகிற கதைகளையும் கிசுகிசுக்களையும் மிகுதியாகத் தந்து வாசகர்களின் ரசனையை மழுங்கடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிற நாட்டில் ஆழ்ந்த இலக்கியத்தை - nரியஸ் லிட்டரேச்சர் - கருத்தில்கொண்டு இயங்குகிற பத்திரிகைகளும், இலக்கியஉணர்வோடு எழுதுகிற படைப்பாளிகளும் போதிய கவனிப்பையும் உற்சாகமான வரவேற்பையும் பெறமுடியாத சூழ்நிலையே இருக்கிறது. எனினும், இலக்கியத்துக்காகவே தங்கள் காலத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து வாழ்ந்த மணிக்கொடி எழுத்தாளர்களின் ஆன்மீக வழிகாட்டலைப் பெற்று, இலக்கியத்தைத் தங்கள் வாழ்க்கையின் தேடலாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் குன்றாத தன்னம்பிக்கையுடனும் தளரா ஊக்கத்தோடும் முயற்சி களில் ஈடுபட்டுவருகிறார்கள். காலம் அவர்களது வெற்றிக்குத் துணைபுரிய வேண்டும்.

இ.