பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கை புதுமை இலக்கியம் - இலங்கை இதழ்கள்

தமிழ்நாட்டில் தீவிரமான இலக்கிய முயற்சிகள் ஊக்கத்தோடும் உற்சாகத்துடனும் செயல்படுத்தப்பட்டு, வெற்றி நடைபோடுகின்ற காலகட்டங்களில், இலங்கையிலும் அவற்றின் தாக்கம் நன்கு உணரப்படும். இலங்கையில் உள்ள இலக்கியவாதிகள் புதுவிழிப்புடனும் புதியவேகத்தோடும் தமிழ்நாட்டில் தடை பெறுகிற முயற்சிகளைப்போல, அங்கும் உற்சாக முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். தமிழ்நாட்டில் மணிக்கொடி வந்துகொண்டிருந்த காலத்தில், இலங்கையில் ஈழகேசரி' தோன்றி இலக்கிய மறுமலர்ச்சிக்காகப் பணிபுரிந்தது. பிறகு கிராம ஊழியன் காலத்தில் இலங்கையில் எழுத் தாளர்கள் மறுமலர்ச்சி இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார்கள். மறுமலர்ச்சி என்றொரு சிறு பத்திரிகையை நடத்தினார்கள். கே. கணேஷ் பாரதி நடத்தினார். சரஸ்வதி நடந்து கொண் டிருந்தபோது அதை ஒட்டி சாந்தி, தாமரை வர ஆரம்பித்த காலத்தில், இலங்கை முற்போக்கு இலக்கியவேகம் தீவிரமாகச் செயல்படலா யிற்று. டொமினிக்ஜீவா மல்லிகையை ஆரம் பித்தார். இன்னும் எத்தனையோ முற்போக்கு இலக்கியச் சிறுபத்திரிகைகள் தோன்றின. மறைந்தன.