பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வல்லிக்கண்ணன்

சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிடெட் 1975 ஏப்ரல் முதல் சுடர் என்ற கலை இலக்கியத் திங்கள் இதழை நடத்தியது. இது சில வருடங்கள் தொடர்ந்து பிரசுரம் பெற்றதாகத் தெரிகிறது.

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளிடையே சிரித்திரன் தனி இடம் பெற்றுள்ளது. இது பரவலான கவனிப்புக்கு இலக்காகி, தமிழகத்தின் சஞ்சிகைகளின் கவனத்தையும் கவர்ந்து பெருமை பெற்றிருக்கிறது.

இதன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் (சிவா ஒர் ஓவியர். இலங்கையின் பிரபல தினசரிகளான தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் சவாரித் தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான் போன்ற பாத்திரங்கள் மூலம் தனக்கெனத்தனி இடம் தேடிக் கொண்டவர் சிவா, இந்த நகைச்சுவைப்படைப்புகளைத் துரிகை மூலம் அளித்து வாசகர்களை ஈர்த்துக் கொண்டவர்.

வடஇந்தியாவிலிருந்து வெளிவரும் கொஞ்ச், லோக சத்தா ஆகிய மராட்டிய ஏடுகளிலும் சிவாவின் ஒவியப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

அரசாங்கக் கட்டடக் கலைப்பகுதியில் கடமையாற்றிய சிவாவுக்கு, தினகரன் ஆசிரியராகப் பணியாற்றிய க. கைலாச பதியின் நட்பு கிடைத்தது. தினகரன் நாளிதழில் தொடர்ந்து தனது படைப்புக்களைப் பிரசுரிப்பதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

அவர் சிறிது காலம் பம்பாயில் தங்கி கட்டடக் கலை இயலில் பயிற்சி பெற நேர்ந்தது. அப்போதுதான் சிவாவின் கார்ட்டுன் சித்திரங்கள் பிளிட்ஸ் முதலிய பத்திரிகைகளில் வரலாயின. இவருடைய சித்திரப் படைப்புக்களைப் பிரசுரித்த கொஞ்ச் என்ற சஞ்சிகை இந்திய தேசியத்தலைவரான வல்லபாய் பட்டேலின் மகன் தாதாபாய் பட்டேல் நடத்தியது ஆகும்.

இலங்கை எழுத்து உலகத்தில் ஆட்சி செலுத்திய முற்போக்கு - பிற்போக்கு - நற்போக்கு என்ற எதிலும் சிக்காதவர் சிரித்திரன் சிவா. சிரித்திரன் என்ற சஞ்சிகையை நடத்துவதற்காக அவர் தான் பார்த்து வந்த அரசாங்க உத்தியோகத்தைத் துறந்தார். தனக்குக் கிடைத்த பணத்தில் பத்திரிகையை ஆரம்பித்தார். அது வெற்றி கரமாக வளர்ந்தது.

செய்தொழில் தெய்வம். சிரிப்பே சீவியம் என்பதை இலட்சிய எண்ணமாகக் கொண்டது சிரித்திரன்.

சிரித்திரனில் முக்கிய இடம்பெறும் மகுடியின் கேள்வி பதில் பகுதி வாசகர்களுக்கு வெகுவாகப் பிடித்தது ஆகும். நகைச்