பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ճյ-5

எனது இலங்கை சுற்றுலா

திடீரென்று வந்த வாய்ப்பு அது. இலங்கைக்குப் போவேன் என்று ஜூன் மாதம் வரை நான் நினைத்ததே இல்லை.

ஜூன் முதல் வாரம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க அமைப்புச் செயலாளர் என். சோமகாந்தன் எழுத்தாளர் நண்பர் செ. யோகநாதனுடன் வந்து, ஜூலை மாதம் நீங்கள் இலங்கை வருகிறீர்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்க 40ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொள்கிறீர்கள். மூத்த எழுத்தாளர் வரதரைப் பாராட்டுகிறீர்கள். அதற்கான ஏற்பாடு களைச் செய்யத்தான் வந்திருக்கிறோம் என்றார்கள்.

இதற்குமுன் நான்கு தடவைகள் வெவ் வேறு காலங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங் களில் இலங்கை நண்பர்கள் என்னை அன்புடன் அழைத்தது உண்டு. வல்லிக்கண்ணனைத் தமிழ்நாடு தெரிந்துள்ளதைவிட இலங்கை அதிகம் அறிந்து வைத்திருக்கிறது. அங்குள்ள இலக்கியவாதிகள் வல்லிக்கண்ணனைப் பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு இருக்கி றார்கள். நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று அவர்கள் கூறுவது வழக்கம். நான் மறுத்து விடுவதும் வழக்கம்தான்.