பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 வல்லிக்கண்ணன் கதைகள்

'அதை எடு; இதைச் செய். தண்ணி கொண்டு வா. உருளைக் கிழங்குத் தோலை உரி' என்ற தன்மையில் சில்லறை அலுவல்களைக் கவனிக்கும்படி ஏவலானாள். குழந்தைகள் செய்ய மறுத்தால், கூப்பாடு போட்டுக் கண்டித்தாள்.ஆசைமாரி பொழிந்தாள். குளிப்பதற்கு, வீட்டு அம்மா தனக்கெனத் தனியாக வைத்திருந்த சோப்பை எடுத்து உபயோகிக்கத் துணிந்தாள். பிறகு, கொடியில் கிடந்த நல்ல சேலையை, அம்மாளிடம் கேட்காமல் தானாகவே எடுத்துக் கட்டிக் கொண்டாள். அம்மா கண்டிக்கவும், அதை அவிழ்த்து அப்படியே போட்டு விட்டாள். அலசிப் பிழிந்து உலர்த்தவில்லை என்று அம்மாளுக்குக் கோபம். அவள் சத்தம் போட்டாள். அந்த ஆத்திரத்தை பாக்கியம் குழந்தைகள் மீது திரும்பினாள். அன்று சமையலை சுவையில்லாதவாறு கெடுத்து வைத்தாள். அடிக்கடி முண முணத்தாள்.

'இனிமேல் நீ சரிப்பட்டு வரமாட்டே!' என்று அம்மா, கணக்குப் பார்த்து ரூபாபைக் கொடுத்து, அவளை அனுப்பி விட்டாள்.

பாக்கியத்துக்கும் முன்னாடி ஒருத்தி வேலை பார்த்தாள். வயது சற்று அதிகமானவள். பெரியம்மா என்றே எல்லோரும் அவளை அழைத்தனர். அவள் நன்றாக வேலை செய்வாள் என்றுதான் தோன்றியது. ஆனால், வேலை செய்கிற நேரங்களை விட அதிகமான ஒய்வு வேளைகளை அந்தப் பெரியம்மா விரும்பினாள் என்பது மூன்று நான்கு நாட்களிலேயே புரிந்து விட்டது. காலையில் நேரம் கழித்துத் தான் எழுந்திருப்பாள். மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு, உண்ட களைப்பால் கண்ணயர்கிற வளை, 'பெரியம்மா காப்பி போடலியா?” 'நேரமாச்சு பெரியம்மா!' என்று 'தார்க்குச்சி போட்டு'த் தான் எழுப்ப வேண்டும். மேலும், ஒவ்வொரு வேலைக்கும் அதைச் செய், இதைச் செய், என்று தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

'நான் எப்படி இருக்க வேண்டியவ! என் மகன் மட்டும் சரியாக இருந்தால், நான் இப்படி புழுக்கை வேலை செய்துக் கிட்டு சங்கடப் படனுமா? அவன் ஊரிலே இல்லாத விதமா அதிசயப் பெண்டாட்டி வந்து சேர்ந்து விட்டாள்னு நெனச்சு, அவளை தோள் மேலே தூக்கி வச்சுக்கிட்டுக் கூத்தாடுதானே! அப்புறம் அந்தத் தேவடியா என்னை மதிப்பாளா? எனக்கு அங்கே இருப்புக் கொள்ளலே. எங்காவது வேலை செய்து காலம் கழிக்கலாமின்னு கிளம்பிட்டேன்' என்று ஒருநாள் அவள் தன் வரலாற்றைப் புலம்பினாள். -

பெரியம்மாளுக்கு 'உழைக்கும் உற்சாகம் குறைந்து கொண்டே வந்தது. தலைவலி, மேல் வலி, நெஞ்சு வலி என்று