பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 98. சிறு அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு பெரியவர் தனது மகளை அவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார். அது முதல் பூவுலிங்கம் தனி அந்தஸ்தையும், பெரிய மனிதத் தன்மையையும் அடைய முடிந்தது. குடும்பத் தலைவர், கடை முதலாளி என்ற தகுதிகள் தாமாகவே வந்து சேர்ந்தன. குடும்பமும், பொறுப்புகளும் பெருகப் பெருக, பூவுவின் தனிப்பட்ட ஆசை- சொந்த ஊரை ஒரு தடவையாவது பார்த்து விட்டு வரவேண்டும் என்ற நினைப்பு - அடிவானம் மாதிரி எட்ட எட்டப் போய்க் கொண்டே இருந்தது. மனைவி வீடு தெற்கத்திச் சீமையில் எங்காவது இருந் திருந்தாலாவது அடிக்கடி அங்கே போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். அதற்கும் இடம் இல்லாது போச்சு! மனித மனம் விசித்திரமானதுதான். கிடைக்கவில்லை-- சமீபத்தில் கிடைக்கவும் கிடைக்காது - என்ற நிலையில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டே அது சதா தறி அடிக்கிறது. எண்ணப் பின்னல்களையும், கனவு நெசவு களையும் செய்து அமைதியைக் கெடுக்கிறது. பெரிய மனிதனாகி விட்ட பூவுலிங்கத்துக்கு, தனது சிறுபிராயச் சூழ்நிலை - அந்தக் காலத்தில் வறண்டதாய், அலுப்புத் தருவதாய் தோன்றிக் கொண்டிருந்ததுதான் - கனவின் இனிமைகளும், கற்பனைப் பசுமைகளும், நினை வின் மினுமினுப்பும் கலந்த அற்புத உலகமாக நிழலிட்டது. சிறு பிள்ளைகளோடு விளையாடிக் களித்த இடங்கள் பலவும் திடீர் நினைவுகளாய் குமிழ் தெறிக்கும் அடிக்கடி. தென்னந்தோப்புகள், பெரிய வீட்டின் வாசலில் இரு புறமும் ஓங்கி வளர்ந்து நின்ற மரமல்லிகை விருட்சங்கள்,