பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2322 வந்தால், அவர்களோடு பேச்சுக் கொடுத்து, சினிமாக்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினாள். ரஞ்சிதம், நீ இருக்கிற அழகுக்கு நீ இருக்க வேண்டிய இடம் சினிமா உலகம்தான். உனக்கு சுலபமா சான்சு கிடைக்கும், நான் அதுக்கு ஏற்பாடு செய்கிறேன்னு ஒருத் தரு சொன்னாரு ஆள் ஜோரா இருப்பாரு. எங்க வீட்டுக்கு மூன்றாவது வீட்டிலே இருந்த வக்கீலுக்கு உறவு. பட்டணத் திலேயிருந்து வந்து பத்து நாள் தங்கியிருந்தாரு பட்ட ணத்தைப் பத்தியும், சினிமா படம் பிடிக்கிறவங்க, அதிலே தடிக்கிறவங்க பத்தியும் நிறைய நிறையச் சொன்னாரு. சிரிச்சு சிரிச்சுப் பேசுவாரு ரொம்ப நல்லவரு. அடுத்த முறை வாரபோது, என்னையும் பட்டணத்துக்கு அழைச் சிட்டுப் போயி சினிமாவிலே நடிக்கதுக்கு சான்சு வாங்கித் தாறேன்னு கூடச் சென்னாரு, தெரியுமா!' ரஞ்சிதம் ஒருத்தியிடம் ரகசியமாகவும் பெருமையாகவும் இதை சொன்னாள். அவள் பொறாமைப்படுவாள் என்று இவள் நினைத்தாள். ஆனால் அந்த அவளோ, இவளை ஒரு தினுசாகப் பார்த்தாள். இது ஒரு மாதிரித்தான் போலிருக்கு. கல்யா ணம் ஆகிறதுக்கு முன்னாடியே கண்டபடி அலைஞ்ச கழுதை! என முடிவுகட்டிப் போட்டாள். நாம குப்பையா அண்ண னுக்கு போயும் போயும் இப்படி ஒரு சின்னச் சவமா பெண் டாட்டியா வந்து வாய்க்கணும்?’ என்று உளம் புழுங்கினாள். சஞ்சிதம் நடத்தை மோசம் என்று தனக்குத் தெரிந்தவர்களி டம் எல்லாம் ரகசியமாகச் சொல்லி வைத்தாள். எந்த ஊரையும் ஊர்காரர்களையும் ரஞ்சிதம் மட்டமாகக் கருதினாளோ, அவர்கள் அவளை மட்டமாக எடைபோட்டு, முத்திரை குத்தி, உன் பவிஷ இவ்வளவு தான் என்று ஒதுக்கி