பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 வல்லிக்கண்ணன் கதைகள் -என்ன வாழ்க்கை வேண்டிக் கிடக்கிறது! வெறும் காஞ்ச பய வாழ்க்கை வயது ஆனதுக்கு மட்டும் குறைச்ச லில்லை, குட்டிச்சுவருக்கு ஆகிறது போல, ஐம்பதைத் தாண்டிவிட்டது! பசுமையான அனுபவம், இனிமையானது, மற்றவர்கள் மத்தியிலே- ஜவுளிக்கடைக்காரன் பகட்டாக, பளபளப்பாக, வசீகரமாக எடுத்துப் பரப்புகிற ஜோன் ஜோரான துணிகளைப் போல் அனைவரையும் கவரும்படி எடுத்துச் சொல்லக்கூடிய அனுபவங்கள் ஒன்றிரண்டுகூட நம்ம வாழ்வில் இல்லையே! சுயம்புவின் நெஞ்சு எக்கப் பெரு மூச்சை நீள உயிர்க்கும். தானாகவே அவன் மனசில் குத்தாலம் பிள்ளை அண்ணாச்சி யின் நினைவு நிழலிடும். குத்தாலம் பிள்ளை சுவாரஸ்யமான மனிதர். அவர் இருக்கிற இடத்தில் கலகலப்பும் இருக்கும். சிரிப்பு அடிக்கடி கலீரிடும். மத்தாப்பூப் பொறிகள் மாதிரி அவரிடமிருத்து ரசமான தகவல்கள் பொங்கிப் பூத்துச் சிதறிக் கொண்டே இருக்கும். பேச்சிலே மன்னன். பாவி மனிதனுக்கு அனுப வங்கள் எங்கிருந்து எப்படித்தான் வந்து சேருமோ! சுயம்புலிங்கத்துக்கு அது பெரிய ஆச்சரியம். குத்தாலம் பிள்ளை பேசுவதைக் கேட்கிறபோதெல்லாம், இதிலே நூத்திலே ஒரு பங்கு நமக்கு ஏற்பட்டாலும் போதுமே! மீதி நாளெல்லாம் அசை போடுவது போல் ஆனந்தமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாமே!’ என்று அவன் மனம் ஏங்கும். அநேகமாக ஆண்கள் அனைவரும் பொம்பிளைகள் பற் றித்தான் பேசினார்கள். தங்களுக்கு அந்த லைனில் கிடைத்த வெற்றிகள் பற்றி, எதிர் பாராது வந்து சேர்ந்த ரொமான்ஸ்கள் பற்றி, ரயில் பயணத்தில் கிடைத்த திடீர் காதல்; புதிய இடத்தில் அகப்பட்ட தொடர்புகள்; தேடிப் போன அனுபவங்கள்; ரிக்ஷாக்காரர்கள் துணையோடு