பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னவளும் பெரியவரும் "அணைக்காதே! விளக்கை அணைக்காதே!”-அடித் தொண்டையில் அலறினாள் வள்ளி, அதில் மேலோங்கி ஒலித் தது அச்சம். "ஏன்? ஏன் அணைக்கப்படாது?’ என்று கத்தினார் பெரியவர்; ஐந்து வயது வள்ளியின் தாத்தா அவர். - "பயமாயிருக்கு!’’ என்னட்டி பயம்?’ இருட்டைக் கண்டாலே எனக்கு பயம்தான். நீ விளக்கை அணைக்காதேயின்னா அணையாமல் இரேன்; இப்ப எதுக்கு விளக்கை அணைக்கப் போறே?” என்று வாதாடினாள் அவள். " விளக்கு எரிஞ்சா தூக்கம் வராது அதுக்குத்தான்.'" பெரிதாக எரிந்து கொண்டிருந்த அரிக்கன் விளக்கின் திரியை உள்ளுக்குள் இறக்கிச் சுருக்குவதற்காக அவர் கையை நீட்டினார். அவள் அலறினாள்: "அணைக்காதே ஐயோ, அணைக் காதேயேன்!’